இலங்கை

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கோவிட் தொற்றாளர் மூவர் மரணம்

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கோவிட் தொற்றாளர் மூவர் இன்று (29) மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கோவிட் தொற்று காரணமாக வவுனியா வைத்தியசாலையின் கோவிட் சிகிச்சை விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மூவர் மரணமடைந்துள்ளனர்.

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரும், நெளுக்குளம் பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவரும், வவுனியா நகரப் பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவருமே இவ்வாறு மரணமடைந்தவர்களாவர்.

குறித்த மூவரது சடலங்களையும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் ஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலை: அதிர்ச்சி தகவல்

Pagetamil

வர்த்தமானியின் பிரகாரம் பெருந்தோட்ட கம்பனிகள் செயற்பட வேண்டும்

Pagetamil

முள்ளிவாய்க்கால் கஞ்சிக்கு தடை: பாண்டிருப்பில் பொலிஸார் குவிப்பு!

Pagetamil

மன்னார் மீனவர் பலி

Pagetamil

இலங்கையை உலுக்கிய மோட்டார் சைக்கிள் பந்தயம்: முதலிடம் பெறுபவர் அழகிய திருநங்கையுடன் ‘நெருக்கம்’ பரிசு; 14 இளைஞர்களுக்கு விளக்கமறியல்!

Pagetamil

Leave a Comment