கணவனை அறிமுகம் செய்த பரீனா: ‘இப்பயாச்சும் கண்ணுல காட்டுனீங்களே’ எனும் ரசிகர்கள்!

Date:

பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி நடிகையான பரீனா ஆசாத் தனது கணவரின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து புகழின் உச்சத்தை தொட்டுள்ளார் நடிகை பரீனா ஆசாத். ஏராளமான ரசிகர்களை கொண்ட பரீனா இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தன் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். சமீபத்தில் கர்ப்பமாக இருக்கும் அவர், தனது புகைப்படங்களை பகிர்ந்த போது எதிர்ப்பும், ஆதரவும் ஒருசேர கிளம்பியது. இருந்தாலும் ஹேட்டர்ஸ்களை புறந்தள்ளி தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தனது காதல் கணவர் பற்றி பலமுறை கூறியுள்ள பரீனா இதுவரை அவருடன் எடுத்த புகைப்படங்களை பொதுவெளியில் வெளியிட்டதில்லை. இந்நிலையில் தனது புதிய போட்டோஷூட்டில் கணவருடன் ஜோடி சேர்ந்து கொண்டு எடுத்து கொண்ட புகைப்படத்தை பரீனா வெளியிட்டுள்ளார். பரீனாவின் கணவரை முதன்முதலில் பார்க்கும் ரசிகர்கள் ‘இப்பயாச்சும் இவர கண்ணுல காட்டுனீங்களே’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

மணலுடன் சென்ற பூநகரி பிரதேசசபை உழவு இயந்திரத்தை பறிமுதல் செய்த பொலிசார்

பூநகரி பிரதேச சபைக்குரிய உழவு இயந்திரம் ஒன்று அனுமதியற்ற மணலுடன் விசேடஅதிரடிப்படையினரால்...

அமெரிக்காவுடனான பேச்சுக்கு பல நிபந்தனைகளை கைவிட்டது ஈரான்!

ஈரான் தனது முந்தைய சில நிபந்தனைகளைக் கைவிட்டு, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் தனது...

யாழில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட யுவதியின் சடலம்!

யாழ்ப்பாணம், இளவாலையில் அமைந்துள்ள கன்னியர் மடத்தில் பணியாற்றும் 19 வயதான யுவதியொருவர்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்