கிளிநொச்சி ஊடகவியலாளர்கள் தொற்று நீக்கும் பணியில்!

Date:

கிளிநொச்சி ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து
கிருமி தொற்று நீக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது.இதுவரையில்
கிளிநொச்சி மாவட்டத்தில் 15மரணங்களும் இடம்பெற்றுள்ளது.கிளிநொச்சி
மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் நேற்று (25) கிளிநொச்சி
மாவட்ட ஊடக அமைய ஊடகவியலாளர்களால் கிளிநொச்சி மாவட்டத்தில் பொது இடங்கள்
மற்றும் பொலிஸ் நிலையம் மற்றும் தனிமைப்படுத்தலுக்குள்ளாகி மீண்ட
வீடுகளிற்குமாக தொற்று நீக்கி விசிரப்பட்டது.

மக்களின் நலன் கருதியும் கொரோனா தொற்றிலிருந்து அனைவரும் பாதுகாப்பாக
இருக்கவும் தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் பாரிய
அளவில் சேவை செய்யும் சுகாதார துறையினருக்கு தாமும் ஒரு கை கொடுக்கும்
முகமாகவும் இன்றைய தினம் குறித்த தொற்று நீக்கும் பணியில் ஈடுபட்டதாக
குறித்த ஊடகவியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

உணவக உரிமையாளர் சுட்டுககொலை: 2 பேர் கைது!

பெல்லன்விலவில் உணவக உரிமையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர்,...

இந்தியா தப்பிச்சென்றவர்களுக்கு வத்தளை துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்பு?

சட்டவிரோதமாகப் படகில் தனுஷ்கோடி சென்ற இரு இலங்கையர்களும் அண்மையில் வத்தளையில் இடம்பெற்ற...

‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ தெலுங்கு படம் அல்ல

தமிழ், தெலுங்​கில் வெற்​றி​பெற்ற ‘லக்கி பாஸ்​கர்’ படத்​துக்​குப் பிறகு, வெங்கி அட்​லூரி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்