30.5 C
Jaffna
March 28, 2024
மருத்துவம்

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த இஞ்சி உலர்திராட்சை பாகு!

உயர் இரத்த அழுத்தம் மோசமான பாதிப்பை உண்டாக்கும் நோய். எதிர்காலத்தில் இது மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும். இந்த நோயை தவிர்க்கவும் கட்டுப்படுத்தவும் கண்டிப்பாக அறிய வேண்டும்.

இந்நோய் மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு, பார்வையில் குறைபாடு உள்ளிட்ட பிரச்சினைகளை உண்டாக்கிவிடலாம். இந்த இரத்த அழுத்தம் அதிகரிக்கும் போது தலைசுற்றல், மயக்கம் வரலாம். சிலருக்கு பித்தத்தாலும் தலைசுற்றல், மயக்கம் போன்ற அறிகுறிகள் இருக்கும். அந்த நேரத்தில் தற்காலிகமாக அறிகுறியை குறைக்க இஞ்சியை உலர் திராட்சையுடன்
எடுத்துக்கொள்ள வேண்டும்.

இஞ்சி உலர் திராட்சை பாகு

இஞ்சி – சிறு துண்டு
உலர் திராட்சை- 10
சர்க்கரை – 2 டீஸ்பூன்
தண்ணீர் – 1 டம்ளர்

இஞ்சியை தோல் சீவி நறுக்கி அரைத்து சாறு எடுக்கவும். சர்க்கரையை வெறும் வாணலியில் போட்டு வறுக்கவும். நீர் விட வேண்டாம். சர்க்கரை கரைந்து பாகு பதத்துக்கு வரும் போது இஞ்சி அரைத்த சாறை சேர்க்கவும். பிறகு தண்ணீர் ஒரு டம்ளர் சேர்த்து இலேசாக கொதிக்கும் போது உலர் திராட்சை சேர்த்து விடவும். பிறகு சில நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கி ஆறியதும் இந்த பழத்தை எடுத்து சாப்பிட்டு விடவும். பிறகு அந்த நீரை குடித்து 30 நிமிடங்கள் ஓய்வு எடுத்தால் இந்த மயக்கம், தலைச்சுற்றல் அறிகுறி குறைய முடியும். பித்தத்தால் தலைசுற்றல், மயக்கம் இருந்தால் இவை சரியாக கூடும்.

இஞ்சி பாகு நன்மைகள்

இந்த பாகை மூன்று நாட்கள் காலை ஒரு வேளை, மாலை ஒரு வேளை என எடுத்துகொள்ள வேண்டும். இதனால் பித்தம் தணிந்து தலைசுற்றலும், மயக்கமும் குணமடையக்கூடும். பித்தம் இருக்கும் போதெல்லாம் இந்த இஞ்சி பாகை எடுத்துகொள்ளலாம். உயர் இரத்த அழுத்தம் தீவிரமாக இருந்தாலும் அவை கட்டுக்கு வரக்கூடும். சிறுவர்களுக்கு கொடுக்கும் போது கால் டம்ளரில் பாதி அளவு கொடுத்தால் போதும். இரத்த அழுத்த பிரச்சினை கொண்டிருப்பவர்கள் மருத்துவ சிகிச்சையை தவிர்க்க கூடாது. இஞ்சி பாகு கொண்டு இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தமுடியும். ஆனால் குணப்படுத்தமுடியாது.

​இரத்த அழுத்தத்துக்கு இஞ்சி நன்மைகள்

இஞ்சியில் காணப்படும் அத்தியாவசிய எண்ணெயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட் பண்புகள், மூட்டு வலி தொடர்பான பிரச்சினைகள் போக்கும். சில ஆய்வுகள் இஞ்சி வேர் கொண்டு தயாரிக்கப்படும் மருந்துகள் கொழுப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுவதாக சொல்கின்றன. மேலும் இது உட்புறம் இரத்த கட்டுதலை தடுக்க உதவுகின்றன. இஞ்சி உட்புற இரத்த கட்டுகளை தடுப்பதால் பக்கவாதம் போன்றவை சரியாகலாம்.

​இரத்த அழுத்தத்துக்கு உலர் திராட்சை நன்மைகள்

உலர் திராட்சை இரத்தச் சோகை பிரச்சினையை தீர்க்கும். இரத்த அழுத்தம் சுகாதார பிரச்சினையை உண்டாக்கும். தினமும் கருப்பு திராட்சை எடுத்துகொள்வதன் மூலம் பல ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கும். இதில் பொட்டாசியம் நிறைவாக உள்ளது. இது பயனுள்ள கனிமம். இது உடலில் சோடியத்தின் அளவை கணிசமாக குறைக்கும். இரத்த அழுத்தத்தை அதிகரிப்பதில் சோடியம் அதிக பங்கு வகிக்கிறது. உயர் இரத்த அழுத்தம் கடுமையான விளைவுகளை உண்டாக்காமல் தவிர்க்க அதை கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம். இது இதய நோய்களிலிருந்து விலகி இருக்க வைக்கும். தினசரி பழங்களை எடுத்துக்கொள்ளும் போது உலர் திராட்சையை அவசியம் சேருங்கள்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஐந்தில் ஒரு பெண்கள் வாழ்நாளில் ஒரு முறையும் உடலுறவில் உச்சக்கட்டத்தை அனுபவிப்பதில்லை!

Pagetamil

புரையேறும் போது தலையில் தட்டலாமா?

Pagetamil

டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

Pagetamil

மூட்டுவலி உள்ளவர்கள் தரையில் உட்காரக்கூடாது என்பது உண்மையா?

Pagetamil

டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

Pagetamil

Leave a Comment