தலிபான்களால் இந்தியாவில் உலர் பழ வர்த்தகம் பாதிப்பு!

Date:

தலிபான்கள் ஏற்றுமதியை நிறுத்தியதால் இந்தியாவில் உலர்பழ வர்த்தகம் பாதிப்பு

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அதிக அளவில் உலர்பழங்கள் இறக்குமதி செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு மட்டும் 55 கோடி டாலர் அளவுக்கு ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு உலர் பழங்கள் இறக்குமதி செய்யப்பட்டது. ஆப்கானிஸ்தானுக்கு தேவையான பொருட்கள் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் வழியாக அனுப்பப்பட்டது.

தற்போது ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தலிபான்கள் இந்தியாவுடனான இறக்குமதி, ஏற்றுமதி உறவை முழுமையாக நிறுத்துகிறது.

இதனால் ஆப்கானிஸ்தானில் இருந்து பொருட்கள் இந்தியாவுக்கு வருவது முழுமையாக நின்றுவிட்டது.

இதன் காரணமாக, வாக் எல்லை வழியாக 200 லாரிகளில் இந்தியா வரும் உலர் பழங்கள் வரத்து நின்றுபோனது. இதனால் உலர் பழ இறக்குமதியாளர்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படுகிறது என்று மும்பையை சேர்ந்த உலர்பழ வியாபாரி ராஜிந்தர் ஷா கூறினார்.

தலிபான்கள் காபூலை முற்றுகையிட தொடங்கியதில் இருந்தே உலர் பழங்களின் விலை உயரத் தொடங்கியது. பாதாம் பருப்பு விலை கிலோவுக்கு ரூ .200 வரை அதிகரித்துள்ளது. அத்தி, உலர் திராட்சை, ஆப்ரிகாட் போன்றவற்றின் விலையும் கிலோவுக்கு ரூ .250 வரை உயர்ந்துள்ளது ஆனால் தற்போது தட்டுப்பாடு இல்லை.

உலர் பழங்கள் போதிய கையிருப்பு உள்ளது. தட்டுப்பாடு ஏற்படும் என்ற காரணத்தால் விலை உயர்ந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வர வேண்டிய உலர்பழ வகைகள் தயாராக உள்ளன. விரைவில் சகஜநிலை திரும்ப வாய்ப்பு உள்ளது.

அதன்பிறகு உலர்பழ வர்த்தகம் சகஜநிலைக்கு திரும்பும் என்று ஆப்கானிஸ்தான் வியாபாரிகள் தெரிவித்ததாக மும்பை வியாபாரி ஒருவர் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

கனடாவில் ATM கொள்ளை – தமிழர் கைது

கனடாவின்  பீல் பிராந்தியத்திலுள்ள – பிராம்ப்டனில் நடந்த மூன்று கொள்ளைச் சம்பவங்கள்...

ஹோர்முஸில் அமெரிக்காவின் சுங்கக்கட்டணம் மட்டுமே இருக்கலாம்!

ஈரானில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தையாளர்கள் முடிக்கத் தவறினால், முக்கியத்துவம்...

ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்தது ஈரான்

தெற்கு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைக் கண்டித்து, முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்