இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான 18 ஏக்கர் நிலம் மற்றும் துறைமுக அதிகாரசபையின் சேவைகளை சீன நிறுவனத்திற்கு மாற்ற எடுக்கப்பட்ட முடிவை உடனடியாக கைவிடுமாறு அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அந்த சங்கம் கடிதமொன்றையும் அனுப்பியுள்ளது
கடிதத்தில், அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன ஜூலை 21 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சரவை ஆவணத்தை சமர்ப்பித்து ஒப்புதல் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் வளங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் அரசின் நடவடிக்கையில் தமது ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.




