வவுனியாவில் 59 பேருக்கு தொற்று!

Date:

வவுனியாவில் மேலும் 59 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று வெளியாகின.

அதில், செல்வாநகர் பகுதியில் இருவருக்கும், பாரதிபுரம் பகுதியில் மூன்று பேருக்கும், கூமாங்குளம் பகுதியில் மூன்று பேருக்கும், நெடுங்குளம் பகுதியில் ஒருவருக்கும், சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கும், சுந்தரபுரம் பகுதியில் ஒருவருக்கும், பண்டாரிக்குளம் பகுதியில் இருவருக்கும், எல்லப்பர்மருதங்குளம் பகுதியில் இரண்டு பேருக்கும், வேப்பங்குளம் பகுதியில் இருவருக்கும், தெற்கிலுப்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், கனகராயன்குளம் பகுதியில் ஒருவருக்கும், பட்டக்காடு பகுதியில் ஐந்து பேருக்கும், நெடுங்கேணி பகுதியில் ஒருவருக்கும், சேமமடு பகுதியில் ஒருவருக்கும், வெளிக்குளம் பகுதியில் ஒருவருக்கும், கற்பகபுரம் பகுதியில் இருவருக்கும், பதவியா பகுதியில் ஒருவருக்கும், புளியங்குளம் பகுதியில் ஒருவருக்கும், தோணிக்கல் பகுதியில் நான்கு பேருக்கும், மகாமைலங்குளம் பகுதியில் ஒருவருக்கும், ஈரப்பெரியகுளம் பகுதியில் ஐந்து பேருக்கும், மகாகச்சகொடி பகுதியில் இருவருக்கும், முதலியார்குளம் பகுதியில் ஒருவருக்கும், வீரபுரம் பகுதியில் மூன்று பேருக்கும், பெரியகுளம் பகுதியில் ஒருவருக்கும், உளுக்குளம் பகுதியில் இருவருக்கும், மெனிக்பாம் பகுதியில் ஒருவருக்கும், கந்தசாமி நகர் பகுதியில் இரண்டு பேருக்கும், பூவரசன்குளம் பகுதியில் ஒருவருக்கும், செக்கட்டிப்புலவு பகுதியில் ஒருவருக்கும், இராசேந்திரங்குளம் பகுதியில் ஒருவருக்கும்ஈ ஒலுமடு பகுதியில் ஒருவருக்கும் என 59 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை சுய தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு – பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் அறிவிப்பு

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக பிரேசில் அணியின் நட்சத்திர வீரர்...

யாழில் சம்பவம்: 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 17 வயது மாமா!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 7 வயதான தனது மருமகளை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில்,...

தாயார் கைத்தொலைபேசியை பறித்ததால் சிறுமி விபரீத முடிவு!

யாழ்ப்பாணத்தில் 15 வயதான சிறுமியயொருவர் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். சிறுமி கைத்தொலைபேசி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்