இலங்கையில் மேலும் 167 COVID-19 தொடர்பான மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
ஓகஸ்ட் 15 ஆம் திகதி இந்த மரணங்கள் பதிவாகியதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இலங்கையின் கொரோனா வைரஸ் தொடர்பான மரணங்களின் எண்ணிக்கை 6,263 ஆக அதிகரிக்கிறது.
இலங்கையில் நாளொன்றில் பதிவாக அதிகபட்ச மரணங்களின் எண்ணிக்கை இதுவாகும்.
மரணித்தவர்களில் 103 ஆண்களும் 64 பெண்களும் அடங்குவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
80 ஆண்கள் மற்றும் 50 பெண்கள் என 130 நபர்கள், 60 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள், 22 ஆண்கள் மற்றும் 14 பெண்கள் என 36 நபர்கள் 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள்.
ஒருவர் 30 வயதிற்குட்பட்டவர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
1
+1