அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு, ஒரே நாளில் 478 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் கவலையளிப்பதாக, மாநில முதலமைச்சர் கிலாடிஸ் பெரெஜிக்லியன் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களில் 61 பேர், நோய் தொற்றியிருந்தபோது சமூகத்தில் நடமாடியதாகத் தெரிவிக்கப்பட்டது.
டெல்ட்டா வகைக் கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த, அகன்ற சிட்னி (Greater Sydney) வட்டாரத்தில் இன்னும் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
மக்கள் விதிமுறைகளைப் பின்பற்றி நடப்பதை உறுதிசெய்ய மாநிலக் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Operation Stay Home என்றழைக்கப்படும் நடவடிக்கையில் விதிமுறைகளை மீறுவோருக்கு ஐயாயிரம் டொலர் வரையில் அபராதம் விதிக்கப்படலாம்.
சுகாதார உத்தரவுகளை மீறியதற்காக, இதுவரை 500 பேர் பிடிபட்டனர்.
அவர்களில் 120 பேருக்கு, முகக்கவசம் அணியாததற்காக தண்டனை விதிக்கப்பட்டது.