25.9 C
Jaffna
March 29, 2024
உலகம்

நியூ சவுத் வேல்ஸில் எகிறுகிறது தொற்று!

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு, ஒரே நாளில் 478 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் கவலையளிப்பதாக, மாநில முதலமைச்சர் கிலாடிஸ் பெரெஜிக்லியன் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களில் 61 பேர், நோய் தொற்றியிருந்தபோது சமூகத்தில் நடமாடியதாகத் தெரிவிக்கப்பட்டது.

டெல்ட்டா வகைக் கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த, அகன்ற சிட்னி (Greater Sydney) வட்டாரத்தில் இன்னும் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

மக்கள் விதிமுறைகளைப் பின்பற்றி நடப்பதை உறுதிசெய்ய மாநிலக் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Operation Stay Home என்றழைக்கப்படும் நடவடிக்கையில் விதிமுறைகளை மீறுவோருக்கு ஐயாயிரம் டொலர் வரையில் அபராதம் விதிக்கப்படலாம்.

சுகாதார உத்தரவுகளை மீறியதற்காக, இதுவரை 500 பேர் பிடிபட்டனர்.

அவர்களில் 120 பேருக்கு, முகக்கவசம் அணியாததற்காக தண்டனை விதிக்கப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாயகியின் உயிரைக் காத்த காதல் சின்னம்!: 21 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ‘டைட்டானிக்’ மரக்கதவு

Pagetamil

ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது: அமெரிக்க அரசிடம் உத்தரவாதம் கோரும் பிரிட்டிஷ் நீதிமன்றம்

Pagetamil

அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் இடிந்து விபத்து: நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இருட்டு அறை… போதைப்பொருள்… சொர்க்க பிரச்சாரம்: ஐஸ் தலைவரின் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த இளம் பெண்களின் தகவல்கள்!

Pagetamil

Leave a Comment