மாவட்ட எல்லைகளில் வீதித்தடைகள்… முகக்கவசம் அணியாவிட்டால் கைது!

Date:

அனைத்து மாவட்டங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் வீதித் தடைகளை நிறுவ காவல்துறை முடிவு செய்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அமுல்ப்படுததப்பட்டுள்ள மாகாணங்களிற்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் மூத்த டிஐஜி அஜித் ரோஹன கூறினார்.

இந்த நடவடிக்கைக்கு முப்படைகளின் உதவியும் பெறப்படும்.

பொலிஸ் வீதித் தடுப்புகள் மற்றும் நடமாடும் ரோந்து நடவடிக்கைகள் மூலம் மாகாண எல்லை கடந்து பயணம் செய்யும் நபர்களை அடையாளம் காணவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதே நேரத்தில் மேற்கு மாகாணத்தின் அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் வழிகளையும் உள்ளடக்கிய கடுமையான வீதித் தடைகள் செயல்படுத்தப்படும்.

எல்லைகளை தாண்டி பயணம் செய்தால் பேருந்து சாரதிகள், நடத்துனர்களும் கைது செய்யப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

முகக்கவசம் தொடர்பான தனிமைப்படுத்தல் விதிமுறைகள் இன்று முதல் கண்டிப்பாக அமுல்ப்படுத்தப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

2020 ஒக்டோபரில் வெளியிடப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவின் கீழ், முறையற்ற முறையில் முகமூக்கவசம் அணிந்த நபர்களையும் கைது செய்யலாம் என மூத்த டிஐஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

நாடாளுமன்றத்தில் எனது இறுதிநாட்கள் இவை: ஊசி அர்ச்சுனா!

தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய யாழ் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற...

ஹோமாகம தலைக்கவச தொழிற்சாலையில் தீ: 5 பேர் பலி

இன்று காலை (21), ஹோமாகம தொழிற்பேட்டையில் உள்ள தலைக்கவசத் தொழிற்சாலை ஒன்றில்...

அதிபர்களுக்கு அநீதி : கிழக்கு ஆளுநர் செயலகம் முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடங்கியது!

கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக கடமைநிறைவேற்று அதிபர்களாக பணியாற்றி வரும் கல்வியாளர்களுக்கு இழைக்கப்பட்டுவரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்