பச்சை நிற உணவுகளை சாப்பிட்டால் என்ன நன்மைகள் ஏற்படும்

Date:

பச்சை நிறத்தில் இருக்கும் உணவுகள் அதிக ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. அவை உடலுக்கும் வாழ்க்கைக்கும் நன்மை பயக்கக் கூடியவை. எனவே எந்த வகையான பச்சை காய்கறிகளை உண்ண வேண்டும் என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்.

பண்டிகை காலம் என்றாலே கொண்டாட்டம் தான். பண்டிகை காலங்களில் பல வகையான திண்பண்டங்களை நாம் உணர்கிறோம். கேசரி, ஜிலேபி என அந்த பட்டியல் நீண்டுக்கொண்டே செல்கிறது. ஆனால் அவை உடலுக்கு ஆரோக்கியமானவையா என்பது பெரிய கேள்வியாக உள்ளது. எனவே பண்டிகை காலங்களில் நாம் பச்சை காய்கறிகளைப் பயன்படுத்துகிறோம். மேலும் இவற்றை தினசரி உணவில் சேர்ப்பதன் மூலம் ஆரோக்கிய நன்மைகளை பெற முடியும். அவற்றை பற்றி இப்போது முழுமையாக பார்க்கலாம்.

பச்சை நிற பண்டிகை

மழைக்காலங்களில் கூட இந்தியாவில் சில பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. வட இந்தியாவில் தீஜ் என்னும் பண்டிகை மழைக்காலத்தில் பிரபலமாக கொண்டாடப்படுகிறது. மழையால் ஏற்படும் பசுமையை குறிக்கும் விதமாக இந்த பண்டிகை உள்ளது.

இந்த பண்டிகை அன்று பெண்கள் பச்சை ஆடைகள் அணிதல் மற்றும் பச்சை வளையல்கள், நகைகள் என அனைத்தும் பச்சை நிறத்தில் அணிந்திருப்பர். அந்த நாளில் அவர்கள் ஒரு நாள் விரதம் இருக்கின்றனர். பிறகு பாடுகின்றனர், நடனமாடுகின்றனர். அன்றைய நாள் அவர்களுக்கு இனிமையானதாக செல்கிறது.

பச்சை இயற்கையை குறிக்க கூடிய ஒரு நிறமாகும். இது புத்துணர்ச்சி, வளர்ச்சி, ஆரோக்கியம், புதுப்பித்தல் மற்றும் ஆற்றல் ஆகியவற்றைக் குறிக்கிறது. இதனால் இந்த நாளில் சுவையான பலகாரம் உண்பதை யாராலும் தவிர்க்க முடியாது. அதே பலகாரங்களிலும் நாம் பச்சை நிற உணவுப் பொருள்களை அதிகம் சேர்ப்பதுண்டு. அது வெறும் இயற்கையை மட்டும் குறிப்பதற்காக அல்ல. ஆரோக்கியத்தையும் குறிப்பது.

வெள்ளரிக்காய்

பச்சை நிறத்துடன் இருக்கும் காய்கறி என்பதை விடவும் இதை வேக வைக்காமல் சாப்பிடலாம் என்பது பலரும் அறிந்த விஷயமே. வெள்ளரிக்காய் ஒரு ஆரோக்கியமான உணவாகும். இவை முக்கியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை மட்டுமின்றி ஆக்ஸிஜனேற்றத்தை ஊக்குவிக்கின்றன. மேலும் இது உடல் நீரேற்றமாக இருக்க உதவுகிறது. இதனால் வெயில் காலங்களில் மக்கள் அதிகமாக வெள்ளரிக்காயை உண்கின்றனர்.

பச்சை பப்பாளி

பச்சை பப்பாளி பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இதனுடன் வேர்கடலையை கலந்து சாலட் செய்யலாம். இது நமது செரிமானத்திற்கு உதவுவது மட்டுமில்லாமல் நச்சுக்களை நீக்கவும் செய்கிறது. கெட்ட கொழுப்பை நீக்குகிறது. மேலும் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்ய முடிகிறது. எடை இழப்பிற்கும் பச்சை பப்பாளி உதவுகிறது.

சுரைக்காய்

சுரைக்காயின் பழச்சாறுகளை அல்வா போன்ற இனிப்புகளில் சேர்க்கலாம். அது உடலுக்கு நன்மை பயக்கும். ஆனால் பொதுவாக இது ஒரு லேசான காய்கறியாகும். சுரைக்காய் இதய ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது மற்றும் உடலில் கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கிறது. மேலும் இது இரத்த சர்க்கரை அளவையும் குறைக்கிறது. இரத்தத்தை சுத்திகரித்தல் போன்ற நடவடிக்கைகளையும் இது செய்கிறது.

தேங்காய் நீர்

நாம் நம்மை எப்போதும் நீரேற்றமாக வைத்துக்கொள்வது மிக முக்கியமாகும். நிறைய பெண்கள் பண்டிகை காலங்களில் விரதத்தில் இருக்கின்றனர். இந்த சமயத்தில் உங்கள் தாகத்தை தணிக்க நீங்கள் தேங்காய் நீரை பயன்படுத்துகிறீர்கள். இது ஒரு ஆரோக்கியமான பானமாகும். இதில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள் உடலில் இயற்கையான ஆற்றலை உடனடியாக பெறுவதற்கு உதவுகின்றன. எனவே விரத நாட்களில் பெண்கள் தங்கள் ஆற்றலை இழக்காமல் இருக்க இது உதவுகிறது.

நெல்லி, கிவி, எலுமிச்சை

இவை மூன்றுமே அதிக மருத்துவ குணங்கள் கொண்டவை. இவற்றை நீங்கள் சாறாகவும் குடிக்கலாம். அல்லது அப்படியே சாப்பிடுவது என்றாலும் சாப்பிடலாம். எப்படி இருந்தாலும் உங்கள் உடலுக்கு தேவையான வைட்டமின் சியை இவை அளிக்கின்றன. இவை நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கின்றன மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட்களாக செயல்படுகின்றன. மேலும் இவை சரும ஆரோக்கியம், உடல் ஆரோக்கியம் இரண்டிற்கும் உதவுகிறது.

சோம்பு சர்பத்

இந்த கடும் வெப்பத்தை நாம் வெல்வதற்கு நமக்கு பருவமழை ஏற்படுகிறது. இந்த காலங்களில் பெருஞ்சீரக விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் இந்த பானம் நமக்கு உதவியாக இருக்கும். இது உங்கள் செரிமான அமைப்பை வலுப்படுத்துகிறது. மேலும் உடலை குளிரூட்டுகிறது. வீக்கம் மற்றும் வாய்வு போன்ற செரிமான பிரச்சினைகளை சரி செய்யவும்.

 

spot_imgspot_img

More like this
Related

நாடாளுமன்றத்தில் எனது இறுதிநாட்கள் இவை: ஊசி அர்ச்சுனா!

தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய யாழ் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற...

ஹோமாகம தலைக்கவச தொழிற்சாலையில் தீ: 5 பேர் பலி

இன்று காலை (21), ஹோமாகம தொழிற்பேட்டையில் உள்ள தலைக்கவசத் தொழிற்சாலை ஒன்றில்...

அதிபர்களுக்கு அநீதி : கிழக்கு ஆளுநர் செயலகம் முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடங்கியது!

கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக கடமைநிறைவேற்று அதிபர்களாக பணியாற்றி வரும் கல்வியாளர்களுக்கு இழைக்கப்பட்டுவரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்