Pagetamil
உலகம்

ஆப்கானின் 2வது பெரிய நகர் கந்தஹார் தலிபான்களிடம் வீழ்ந்தது!

ஆப்கானிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரான கந்தஹாரை கைப்பற்றி விட்டதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில், அந்நாட்டு அரசுக்கும் தலிபான்களுக்கும் உள்நாட்டுப் போர் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுவந்த அமெரிக்க இராணுவம் அங்கிருந்து வெளியேறி வருகிறது.

வரும் ஓகஸ்ட் 30ஆம் திகதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுவதுமாக வெளியேறிவிடும் என்று கூறப்பட்டிருக்கிறது. அமெரிக்கப் படைகள் வெளியேறுவதைத் தொடர்ந்து நிலைமை அங்கு மிக மோசமாக மாறிவருகிறது. கடந்த சில தினங்களாக, தலிபான்கள் தங்களின் தாக்குதல்களை அதிகப்படுத்தி உள்ளனர். முக்கிய நகரங்களை வரிசையாக தமது கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார்கள்.

நேற்று முன் தினம் இரண்டு மாகாணங்களின் தலைநகரை தலிபான்கள் கைப்பற்றினர். தலைநகர் காபூல் போன்ற முக்கிய நகரங்களையும் தலிபான்கள் நெருங்கி வருகிறார்கள்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரான காந்தகாரை தலிபான்கள் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் பக்கத்தில், கந்தஹார் முற்றிலுமாக கைப்பற்றப்பட்டது. நகரத்தில் உள்ள தியாகிகள் சதுக்கத்தை, முஜாஹிதீன்கள் அடைந்துள்ளனர் என்று தெரிவித்திருந்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ட்ரம்ப்- புடின் தொலைபேசி உரையாடல்: 30 நாள் எரிசக்தி கட்டமைப்புக்கள் மீதான தாக்குதல் நிறுத்தத்திற்கு ரஷ்யா ஒப்புதல்!

Pagetamil

9 மாதங்களுக்குப் பிறகு பாதுகாப்பாக பூமி திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்!

Pagetamil

போர்நிறுத்தம் பற்றிய புடினின் கருத்துக்கு டிரம்பின் எதிர்வினை

Pagetamil

’30 நாள் போர் நிறுத்தத்திற்கு தயார்; ஆனால்…’: புடின்

Pagetamil

உலகையே உலுக்கிய பாகிஸ்தான் ரயில் பயணிகள் கடத்தல்: பிந்திய நிலவரம்!

Pagetamil

Leave a Comment