கஞ்சிகுடிச்சாறில் வகைதொகையின்றி அகழப்படும் மணல் கொழும்பு செல்கிறது: அதிகாரிகள் உறக்கம்! (VIDEO)

Date:

அம்பாறை, கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் வகைதொகையில்லாமல் மணல் அகழப்பட்டு, கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது.

திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக பெருமெடுப்பில் மணல் அகழப்பட்டு வருகிறது. சுமார் 15- 20 உழவு இயந்திரங்கள் கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியிலிருந்து மணலை அள்ளிவந்து காஞ்சிரங்குடா பகுதியில் களஞ்சிப்படுத்துகின்றன. பகல் முழுவதும் ஓயாமல் இந்த பணி நடக்கிறது.

இதற்காக காட்டுக்குள் கனரக இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

காஞ்சிரங்குடாவிலிருந்து டிப்பர் வாகனங்களில் மணல் கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக பிரதேச மக்கள் அனைத்து அரச நிர்வாக அலகுகளிற்கும் தெரியப்படுத்தியதாக குறிப்பிடுகிறார்கள். எனினும், யாரும் அதில் தலையிடவில்லை.

இதனால் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகம் உருவாகியுள்ளது.

யாருடைய பின்னணியில் இந்த இயற்கை அழிப்பு நடைபெறுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விஜய்யை வாழ்த்தியதால் அநுரவுக்கு வந்த சிக்கல்!

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அனுர...

கோட்டாவின் கொடூர பழிவாங்கலுக்கு பரிகாரம்: ஷானி அபேசேகரவிற்கு பதவி உயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இயக்குநரான ஷானி அபேசேகரவை, காவல்துறை பிரதிப் பொலிஸ்...

இளம் மனைவியை காணவில்லையென கணவன் முறைப்பாடு!

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காணவில்லை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்