கௌதாரிமுனை சீனப்பண்ணைக்கும் கடற்தொழிலாளர் சங்கத்திற்குமிடையில் ஒப்பந்தம்!

Date:

கௌதாரி முனை விநாயகர் கடற் தொழிற்சங்க உறுப்பினர்கள் ஏழு பேருக்கு அட்டைப் பண்ணைக்கான அனுமதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு இன்று பூநகரி பகுதியில் அமைந்துள்ள இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் வடமாகாணத்திற்கான பிராந்திய அலுவலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற நிகழ்விலையே குறித்த அனுமதிள் வழங்கிவைக்கப்பட்டது

52 பேர் குறித்த அனுமதியை கோரி உள்ள நிலையில் 7 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதுடன் எதிர்வரும் திங்கட்கிழமை அட்டைப் பண்ணைக்கான பணி ஆரம்பித்து வைக்கப்பட உள்ளது இதில் அனுமதிக்கு கோரிய 52 பேரும் அட்டைப்பண்னைக்குரிய பணிகள் ஆரம்பிக்க முடியும். மிகுதியானவர்களுக்கு அனுமதி விரைவில் வழங்கப்படும். அனுமதி இல்லை என்பதற்காக அட்டைப் பண்ணையினை ஆரம்பிக்காமல் இருக்க வேண்டாம் என அமைச்சர் தெரிவித்தார்.

அதனை விட குறித்த பகுதியில் சீன நிறுவனத்தால் நடத்தப்படும் அட்டைப் பண்ணைக்கான அனுமதி கௌதாரி முனை விநாயகர் கடற்றொழில் சங்கத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு சீன நிறுவனத்திற்கு ஒப்பந்தம் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்

இன் நிகழ்வில் இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வட மாகாண உதவிப் பணிப்பாளர் பி.நிருபராஜ் பூநகரி பிரதேச செயலாளர் கிருஸ்னேந்திரன் மற்றும் துறைசார் அதிகாரிகள் மீனவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

FIFA WC 2026 | பிரான்ஸை துவம்சம் செய்து வெண்கலம் வென்றது இங்கிலாந்து!

2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில், பிரான்ஸ்...

‘இதுதான் வாழ்க்கை’: குழந்தை யமாலுடன் எடுத்த புகைப்படம் பற்றி மெஸ்ஸி விளக்கம்!

அர்ஜென்டினா கப்டன் லயோனல் மெஸ்ஸி, யமால் குழந்தையாக இருந்தபோது இருவரும் ஒன்றாகப்...

நாடு முழுவதும் ‘ரடம ஏகட்ட’ விசேட நடவடிக்கை – 700-க்கும் மேற்பட்டோர் கைது

நாடு முழுவதும் நேற்று (ஜூலை 17) முன்னெடுக்கப்பட்ட ‘ரடம ஏகட்ட’ (Ratama...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்