யாழ் மாவட்டத்தில் நேற்று (9) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் சோதனைகளில் 65 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 29 பேர், வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேர், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேர், ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேர், யாழ் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேர், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர் நேற்று அன்டிஜன் சோதனையில் தொற்றிற்குள்ளாகியது தெரிய வந்தது.
இதேவேளை, யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 46 பேருக்கு தொற்று உறுதியானது.
இதில் வவுனியா தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 26 பேரும், வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேரும், யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.




