யாழில் அன்டிஜன் சோதனையில் மட்டும் 65 தொற்றாளர்கள்!

Date:

யாழ் மாவட்டத்தில் நேற்று (9) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் சோதனைகளில் 65 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 29 பேர், வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேர், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேர், ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேர், யாழ் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேர், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர் நேற்று அன்டிஜன் சோதனையில் தொற்றிற்குள்ளாகியது தெரிய வந்தது.

இதேவேளை, யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 46 பேருக்கு தொற்று உறுதியானது.

இதில் வவுனியா தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 26 பேரும், வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேரும், யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

 

spot_imgspot_img

More like this
Related

நாடு முழுவதும் ‘ரடம ஏகட்ட’ விசேட நடவடிக்கை – 700-க்கும் மேற்பட்டோர் கைது

நாடு முழுவதும் நேற்று (ஜூலை 17) முன்னெடுக்கப்பட்ட ‘ரடம ஏகட்ட’ (Ratama...

பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதி, மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு...

கடும் வெப்பம்: பல பகுதிகளில் எச்சரிக்கை நிலை

இன்று (18) கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்