மாகாண எல்லை கடந்து பயணிக்கும் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் கடமை அடையாள அட்டை பரிசோதனை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நடத்துனர், சாரதி அடைாள அட்டைகளை பரிசோதிப்பது நடைமுறையில் இல்லாததால், இந்த பணிக்காக பொலிசாரின் ஒத்துழைப்பை இ.போ.ச பெற்றுக்கொள்ளவுள்ளது.
அத்தியாவசிய தேவையின்றி மாகாண எல்லை கடந்து பயணிப்பவர்களை அடையாளம் காண இந்த நடைமுறை அமுலாகிறது.
மாகாண எல்லை கடந்து பயணிக்கும் பயணிகளிடம் மட்டுமே இந்த சோதனை மேற்கொள்ளப்படும். மாகாணத்திற்குள் பயணம் செய்பவர்களிடம் சோதனை மேற்கொள்ளப்படாது.




