நாடே கொரோனாவில் கொந்தளிப்பு: மாணவர்களை நுவரெலியாவிற்கு சுற்றுலா அழைத்துச் சென்ற தனியார் கல்வி நிலையம்!

Date:

கோவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வவுனியாவில் இருந்து நுவரெலியாவிற்கு சிறுவர்களை சுற்றுலா அழைத்து சென்ற தனியார் கல்வி நிலையம் தொடர்பில் சுகாதாரப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நாடு முழுவதும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், தினசரி 50 க்கு மேற்பட்ட மரணங்களும் நிகழ்ந்த வண்ணமுள்ளது. அத்துடன் மாகாணத்திற்கிடையிலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதிலும், அத்தியாவசிய தேவை நிமிர்த்தம் மாத்திரம் பயணங்களை மேற்கொள்ளுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் ஆரம்ப கல்வி பாடசாலையினர் சிறுவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், நிர்வாகத்தினர் என 50க்கு மேற்பட்டவர்களுடன் நுவரெலியா நோக்கி தனியார் பேரூந்தில் இன்று (08) அதிகாலை சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

நாட்டில் கோவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து நாடு அபாய கட்டத்தில் உள்ள நிலையில், பொறுப்பாக செயற்பட வேண்டியவர்கள் பொறுப்பற்ற விதமாக சுற்றுலாப் பயணத்திற்கு சிறுவர்களை அழைத்து சென்றுள்ளமை தொடர்பில் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளதுடன், இவ்விடயம் தொடர்பில் சுகாதாரப் பிரிவினருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து குறித்த கல்வி நிலையத்தின் செயற்பாடு தொடர்பில் சுகாதாரப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ரசிக வெறியால் வந்த வினை: தமிழக தேர்தலில் கள்ள வாக்கிட்ட இலங்கைத் தமிழர்கள் பலர் கைது!

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற்று முடிந்துள்​ளது. எப்​போதும் இல்​லாத வகை​யில் இந்​த​முறை...

யாழில் மின்னல் தாக்கி இளைஞன் பலி

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் நேற்று (14) மின்னல் தாக்கி இளைஞர்...

உக்ரைனின் ட்ரோன்கள் அத்துமீறியதால் கவிழ்ந்த ஆட்சி: லாட்வியாவில் நடப்பது என்ன?

பால்டிக் நாடான லாட்வியாவிற்குள் அத்துமீறி நுழைந்த உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்