யாழ்.மாநகரசபை உறுப்பினர் ப.தர்சானந் இனால் வீதிகள் புனரமைப்பு

Date:

2021ஆம் ஆண்டுக்கான யாழ்.மாநகரசபையின் வட்டாரங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து வீதிகளைப்புனரமைக்கும் செயற்பாடுகளை யாழ்.மாநகரசபை ஆரம்பித்துள்ளது.

யாழ்.மாநகரசபையின் 02ஆம் வட்டாரமான கந்தர்மடம் வடமேற்கு வட்டாரத்தின் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் ப.தர்சானந் இனது சிபார்சின் கீழ் முதற்கட்டமாக விடுவிக்கப்பட்ட ரூ.01 மில்லியன் செலவில் 04 கையொழுங்கை வீதிகள் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக வழங்கப்பட்டுள்ளன.

பலாலி வீதி பீட்ஸா ஹட் ஒழுங்கை, சீனியர்லேன் கையொழுங்கை, சபாபதி வீதி கையொழுங்கை, நாச்சிமார் வீதி கையொழுங்கை என்பனவே யாழ்.மாநகரசபை உறுப்பினர் ப.தர்சானந் இனது சிபார்சின் கீழ் புனரமைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக இடம்பெற்ற மேற்படி வீதிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் வட்டார உற்ப்பினருடன் முன்னாள் யாழ்.மாநகர முதல்வர் இ.ஆர்னோல்ட், மற்றும் இந்நாள் யாழ்.மாநகரசபை பிரதி முதல்வர் து.ஈசன், மாநகரசபை உறுப்பினர்களான திருமதி.மதிவதனி விவேகானந்தராசா, திருமதி நளினா பிரேம்லால் மற்றும் ஒழுங்கை வாழ்.பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

FIFA WC 2026 | பிரான்ஸை துவம்சம் செய்து வெண்கலம் வென்றது இங்கிலாந்து!

2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில், பிரான்ஸ்...

‘இதுதான் வாழ்க்கை’: குழந்தை யமாலுடன் எடுத்த புகைப்படம் பற்றி மெஸ்ஸி விளக்கம்!

அர்ஜென்டினா கப்டன் லயோனல் மெஸ்ஸி, யமால் குழந்தையாக இருந்தபோது இருவரும் ஒன்றாகப்...

நாடு முழுவதும் ‘ரடம ஏகட்ட’ விசேட நடவடிக்கை – 700-க்கும் மேற்பட்டோர் கைது

நாடு முழுவதும் நேற்று (ஜூலை 17) முன்னெடுக்கப்பட்ட ‘ரடம ஏகட்ட’ (Ratama...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்