களுத்துறை மாவட்டத்தில் நேற்று 548 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 45% தொற்றாளர்கள் மேல் மாகாணத்தில் இருந்து கண்டறியப்பட்டனர்.
நேற்று நாடு முழுவதும் 2,794 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். இலங்கையில் இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 324,223 ஆக உயர்ந்தது.
நேற்று மாவட்ட ரீதியாக அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் விபரம்-
களுத்துறை 548, கம்பஹா 369, கொழும்பு 356, கண்டி 224, யாழ்ப்பாணம் 174, அம்பாறை 135, இரத்தினபுரி 129 , மாத்தளை 114, காலி 111, பதுளை 107, மட்டக்களப்பு 89, புத்தளம் 86, கேகாலை 63, மொனராகலை 60, மாத்தறை 56, குருநாகல் 35, நுவரெலியா 32, வவுனியா 29, திருகோணமலை 22 , கிளிநொச்சி 17, ஹம்பாந்தோட்டை 13, பொலன்னறுவை 11, முல்லைத்தீவு 7, அனுராதபுரம் 3 மற்றும் மன்னார் 2, வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய 2 பேர் நேற்று தொற்றிற்குள்ளாகினர்.




