நாளை ஆடி அமாவாசை தினத்தன்று தந்தையர்களை நினைந்து வீட்டிலிருந்து விரதம் அனுட்டிக்கும்படி சைவ மகா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
வீட்டு நீரில் இறை நாமங்களை கூறி தீர்த்தமாடுங்கள். உங்கள் வீட்டிற்கு வரும் உயிரினங்களிற்கு உணவு (தானம்) அளியுங்கள்.
எம் அன்பிற்கு இனிய தந்தையரை நாம் ஆண்டு தோறும் மனதில் இருத்தி பூசிக்கும் உயரிய நாளில் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் தாய் தந்தையர் கொரோனா எனும் கொடிய நோயில் அகப்பட்டு மரணிக்க நாம் காரணமாக இல்லாது இருப்போம் என தெரிவித்துள்ளது.




