அடுத்தவாரம் பிசிஆர், அன்டிஜன் சோதனைகளிற்கு விலைக்கட்டுப்பாடு!

Date:

அடுத்த வாரம் பிசிஆர் மற்றும் ரபிட் அன்டிஜென் சோதனைகளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

பிசிஆர் சோதனைகள் நடத்தும் 45 மருத்துவமனைகளும், அன்டிஜென் சோதனைகள் நடத்தும் 43 மருத்துவமனைகளும் 21 மாவட்டங்களில் நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டன.

சோதனைகள் வெவ்வேறு விலை விகிதங்களில் நடத்தப்பட்டது தெரியவந்தது.

அதன்படி, ஒரு பிசிஆர் சோதனைக்கு ரூ .5,000 முதல் ரூ .9,500 வரையும், அன்டிஜென் சோதனை ரூ .2,000 முதல் ரூ .5,900 வரையும் அறவிடப்பட்டுள்ளது தெரிய வந்தது.

எனவே அடுத்த வாரம் முதல் சோதனைகளுக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அழகியவண்ண கூறினார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

சமையலறையில் கசிப்பு உற்பத்தி

வீட்டின் குளியலறையில் இயங்கி வந்த கள்ளச் சாராய ஆலையில் அம்பாறை மாவட்ட...

“முட்​டாள்​தன​மான 3 திருமணங்களுக்​காக 17 ஆண்டுகளை வீணடித்தேன்” – மீரா வாசுதேவன்

தமிழில் ‘உன்​னைச் சரணடைந்​தேன்’ படத்​தில் நாயகி​யாக நடித்தவர் மீரா வாசுதேவன். ஜெர்​ரி,...

“பரஸ்பர புரிதலுடன் தனிப் பாதையில் செல்கிறோம்” – கணவரை பிரிந்​தது பற்றி மவுனி ராய் விளக்​கம்

பிரபல பாலிவுட் நடிகை​யான மவுனி ராய், ஏராள​மான சின்​னத்​திரை தொடர்​களி​லும் நடித்​துள்​ளார்....
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்