32.7 C
Jaffna
April 25, 2024
இலங்கை

விடுவிக்கப்பட்ட முன்னாள் அரசியல் கைதி விசாரணைக்கு அழைப்பு!

வவுனியாவில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதி ஒருவரை பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வருமாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் (ரி.ஐ.டி) இன்று (06) அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதியான செல்வநாயகம் ஆனந்தவர்மன் என்பவரையே எதிர்வரும் 10 ஆம் திகதி வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத விசாரணை மற்றும் தடுப்பு பிரிவுக்கு சமூகமளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பாணையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பயங்கரவாத விசாரணை மற்றும் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக, விசாரணையை மேற்கொள்வதற்கு 2021 ஆம் ஆண்டு 8 ஆம் மாதம் 10 ஆம் திகதி காலை 10 மணிக்கு பயங்கரவாத விசாரணை மற்றும் தடுப்பு பிரிவு வவுனியா கிளைக்கு சமூகமளிக்குமாறு அழைக்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘முஸ்லிம்களில் எனக்கு நெருக்கமானவர்கள் இல்லை’: கர்தினாலின் குற்றச்சாட்டுக்கு கோட்டா பதில்!

Pagetamil

வேலையற்ற பட்டதாரிகள் யாழ் மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு போராட தீர்மானம்!

Pagetamil

பிரபல மேலதிக வகுப்பு ஆசிரியர் கைது!

Pagetamil

நாடகமும் அரங்கியலும் தேசிய தொழில் தகமை பயிற்சிகள்

Pagetamil

கொக்குவில் புகையிரத நிலையம் சீல்!

Pagetamil

Leave a Comment