மட்டக்களப்பில் பயங்கரம்: பெண் கடத்தப்பட்டு கொலை; சாக்கில் அடைத்து சந்தையில் வைக்கப்பட்டது!

Date:

வாழைச்சேனையில் நேற்று காணாமல் போன பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

அந்தப் பெண்ணின் உடல் சாக்கில் அடைக்கப்பட்ட நிலையில், வாழைச்சேனை சந்தையில் வைக்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பகுதியை சேர்ந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணே முச்சக்கர வண்டியில் கடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று பகல் வங்கியொன்றிற்கு சென்றுவிட்டு, ஹாட்வெயார் ஒன்றிற்கு சென்றார். பகல் 12.30 மணியின் பின்னர் காணாமல் போயிருந்தார்.

நேற்று மாலை இருவர் வாழைச்சேனை சந்தைக்குள் உள்ள கடையொன்றின் முன்பாக சாக்கொன்றை வைத்து விட்டு, பார்த்துக் கொள்ளும்படியும், மீண்டும் வந்து எடுப்பதாகவும் கூறிச் சென்றனர்.

எனினும், நீண்டநேரமாகியும் யாரும் வராததையடுத்து சந்தேகமடைந்த கடை உரிமையாளர் பொலிசாருக்கு தகவல் வழங்கினார்.

பொலிசார் மேற்கொண்ட சோதனையில் பெண்ணொருவர் கொல்லப்பட்டு, சாக்கில் அடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக 27 வயதான இளைஞன் உள்ளிட்ட இருவர் சந்தேகத்தில் கைதாகியுள்ளனர்.

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

16 வயது சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தல்: 21 வயது குடும்பஸ்தரும் நண்பரும் மடக்கிப் பிடிப்பு!

மட்டக்களப்பு நகரில் உறவினர் வீட்டுக்கு சென்ற 16 வயது சிறுமி ஒருவரை...

ரசிக வெறியால் வந்த வினை: தமிழக தேர்தலில் கள்ள வாக்கிட்ட இலங்கைத் தமிழர்கள் பலர் கைது!

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற்று முடிந்துள்​ளது. எப்​போதும் இல்​லாத வகை​யில் இந்​த​முறை...

யாழில் மின்னல் தாக்கி இளைஞன் பலி

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் நேற்று (14) மின்னல் தாக்கி இளைஞர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்