அடுத்தவாரம் பிசிஆர், அன்டிஜன் சோதனைகளிற்கு விலைக்கட்டுப்பாடு!

Date:

அடுத்த வாரம் பிசிஆர் மற்றும் ரபிட் அன்டிஜென் சோதனைகளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

பிசிஆர் சோதனைகள் நடத்தும் 45 மருத்துவமனைகளும், அன்டிஜென் சோதனைகள் நடத்தும் 43 மருத்துவமனைகளும் 21 மாவட்டங்களில் நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டன.

சோதனைகள் வெவ்வேறு விலை விகிதங்களில் நடத்தப்பட்டது தெரியவந்தது.

அதன்படி, ஒரு பிசிஆர் சோதனைக்கு ரூ .5,000 முதல் ரூ .9,500 வரையும், அன்டிஜென் சோதனை ரூ .2,000 முதல் ரூ .5,900 வரையும் அறவிடப்பட்டுள்ளது தெரிய வந்தது.

எனவே அடுத்த வாரம் முதல் சோதனைகளுக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அழகியவண்ண கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

நாடு முழுவதும் ‘ரடம ஏகட்ட’ விசேட நடவடிக்கை – 700-க்கும் மேற்பட்டோர் கைது

நாடு முழுவதும் நேற்று (ஜூலை 17) முன்னெடுக்கப்பட்ட ‘ரடம ஏகட்ட’ (Ratama...

பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதி, மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு...

கடும் வெப்பம்: பல பகுதிகளில் எச்சரிக்கை நிலை

இன்று (18) கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்