வடக்கில் பால்மா பதுக்கிய 3 வர்த்தக நிலையங்களிற்கு எதிராக வழக்கு!

Date:

வடமாகாணத்தில் பால்மா உற்பத்தி பதுக்கல் தொடர்பில் 3 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக என வடமாகாண பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் பிராந்திய அலுவல்கள் பதில் உதவிப்பணிப்பாளர் எ.எல். ஜவ்பார் சாதிக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக இரு பால்மா வகைகளுக்கான தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், பால்மா பொருட்களை பதுக்கும் செயற்பாட்டில் ஒர் சில வர்த்தகர்கள் ஈடுபடுவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

கடந்த சில வாரங்களாக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பிரதான பால்மா வகைக்கும், உள்ளுர் உற்பத்தி பால்மா வகைக்கும் என இரு வகையான பால்மா வகைகளுக்கு வவுனியா மாவட்டத்திலுள்ள அனைத்து இடங்களிலும் தட்டுப்பாடுகள் நிலவி வருவதுடன், ஒர் சில வர்த்தக நிலையங்களில் பால்மா இருப்புக்கள் காணப்படுகின்ற போதிலும் அதனை பதுக்கும் செயற்பாட்டில் ஒர் சில வர்த்தகர்கள் ஈடுபடுவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளமையுடன் தற்போது மக்கள் பசு பாலினை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டியுள்ளமையும் அவதானிக்க கூடியதாகவுள்ளது.

பால்மா தட்டுப்பாடு மற்றும் பால்மா பதுக்கல் தொடர்பில் வவுனியா மாவட்ட செயலக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரபையினரை தொலைபேசியூடாக தொடர்பு கொண்ட போதும் அவர்கள் பதிலளிக்கவில்லை.

பால்மா தட்டுப்பாடு மற்றும் பால்மா பதுக்கல் தொடர்பில் வடமாகாண பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் பிராந்திய அலுவல்கள் பதில் உதவிப்பணிப்பாளர் எ.எல். ஜவ்பார் சாதிக் அவர்களை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு கேட்ட போது,

வடமாகாணத்தில் பால்மா உற்பத்தி பதுக்கல் தொடர்பில் 3 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் மேற்கொள்ளப்பட்டதுடன், வடமாகாணத்தில் அனைத்து மாவட்டத்திலும் உள்ள எமது அலுவலர்கள் சோதனை நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர். மேலும் பால்மா பதுக்கல் தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள இருந்தால் அருகேயுள்ள பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை காரியாலயத்தில் முறைப்பாட்டினை மேற்கொள்ளுமாறும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

சங்கானையில் வீட்டுக்குள் இளைஞர் சடலமாக மீட்பு

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கானைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து துர்நாற்றம்...

FIFA WC 2026 | பிரான்ஸை துவம்சம் செய்து வெண்கலம் வென்றது இங்கிலாந்து!

2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில், பிரான்ஸ்...

‘இதுதான் வாழ்க்கை’: குழந்தை யமாலுடன் எடுத்த புகைப்படம் பற்றி மெஸ்ஸி விளக்கம்!

அர்ஜென்டினா கப்டன் லயோனல் மெஸ்ஸி, யமால் குழந்தையாக இருந்தபோது இருவரும் ஒன்றாகப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்