விஜய் டிவியில் செந்தூரப்பூவே சீரியலில் வில்லியாக நடித்து வந்தவர் தர்ஷா குப்தா. அவர் வில்லியாக நடித்தாலும் பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார். அவர் சமூக வலைதளங்களில் அடிக்கடி வெளியிடும் போட்டோசூட் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் இளைஞர்களை கவர்கிறது.
பல்வேறு பல கவர்ச்சியாக இருப்பதும் முக்கிய கரணம் ஆகும். அதனால் தர்ஷா குப்தாவுக்கு சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. பல ஹீரோயின்களுக்கு நிகராக இவர் 1.5 மில்லியன் ரசிகர்களை வைத்திருக்கிறார். அவர்களுக்காகவே தினந்தோறும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் அவர் மறப்பதில்லை.
தற்போது தற்போது சினிமாவில் பிசியாக இருக்கிறார் தர்ஷா. ஒரு சில படங்களில் அவர் கமிட் ஆகியிருக்கும் நிலையில் செந்தூரப்பூவே சீரியலில் இருந்து திடீரென விலகி இருக்கிறார். அது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சினிமா ஷூட்டிங்கில் பிசியாக இருப்பது தான் விலகியது. இருப்பினும் தர்ஷா இன்ஸ்டாகிராமில் போட்டிருக்கும் பதிவு மேலும் சில குழப்பங்களை ஏற்படுத்துகிறது.
“எதிரி இல்லை என்றால் நீ இன்னும் இலக்கத்தை நோக்கி பயனிக்கவில்லை என்று அர்த்தம்” என அவர் குறிப்பிட்டுள்ளார். அதனால் அவர் எதோ பிரச்சனை நடந்ததால் தான் சீரியலில் இருந்து வெளியேறினாரா என கேள்வி எழுப்பி வருகிறது நெட்டிசன்கள்.




