மட்டக்களப்பில் முள்ளிவாய்க்காலை நினைவுகூர்ந்தவர்களின் விளக்கமறியல் நீடிப்பு!

Date:

மட்டக்களப்பு – கிரான் பகுதியில் முள்ளிவாய்க்கால் நிமைனவேந்தல் நிகழ்வு நடாத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கல்குடா பொலிசாரினால் கைது செய்யப்பட்ட 10 பேரின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே18ம் ஆம் திகதி இரு பெண்கள் உட்பட்ட 10பேர் கைது செய்யப்பட்ட வழக்கு இன்று (27) வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.எச்.எம்.பசீல் முன்னிலையில் இவ் வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கில் மூத்த சட்டத்தரணி இரட்ணவேல் மற்றும் கே.சுகாஸ் உள்ளிட்ட சட்டத்தரணிகள் கைது செய்யப்பட்ட (10) பேர் சார்பாக முன்னிலையாகியிருந்தனர்.

குறித்த வழக்கு எதிர்வரும் ஜுலை மாதம் 09.08.2021 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பொலிசாரால் இன்று எவ்விதமான அறிக்கை மற்றும் அடையாளங்களும் மன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை.

அத்தோடு பத்து சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவில்லை.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இன்று ஈரானை தாக்கவிருந்தபோதும் அயல் நாடுகளின் கோரிக்கையால் கைவிட்டுள்ளோம்: ட்ரம்ப்

சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின்...

அம்பாறையில் ஒருவர் சுட்டுப்பிடிப்பு

காவல்துறை காவலில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர், நேற்று...

டித்வா அனர்த்தத்தில் மண்ணுக்குள் புதைந்த முச்சக்கர வண்டி 171 நாட்களின் பின் மீட்பு

டித்வா புயலால் உவபரநாகமவில் உள்ள மஸ்பன்ன என்ற சிறிய ஊருக்கு அருகே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்