அடுத்த வாரம் முதல் பாடசாலைகள் மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு சலுகை விலையில் முகக்கவசங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பாக முகக்கவச தயாரிப்பாளர்களுடன் கலந்துரையாடி வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.



