எதிர்ப்பின் மத்தியில் வடக்கு பிரதம செயலாளராக பதவியேற்கிறார் சமன் பந்துலசேன!

Date:

வடமாகாண பிரதம செயலாளராக பதவியேற்பதை முன்னிட்டு சமன் பந்துலசேன வவுனியா ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தில் விசேட பூசை வழிபாட்டில் இன்று (26) காலை ஈடுபட்டார்.

வவுனியா மாவட்டத்தின் அரச அதிபர் எஸ்.எம்.சமன்பந்துலசேன வடக்கின் பிரதம செயலாளராக ஜனாதிபதியால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டார்.

வடமாகாண ஆளுனரின் சிபாரிசின் பின்னணியில் அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சுள்ளது. வடக்கில் சிங்கள மொழி பேசுபவர் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டமைக்கு பரவலான எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகிறது.

வடமாகாண பிரதம செயலாளராக சமன் பந்துலசேன யாழ்ப்பாணத்தில் இன்று பதவியேற்கவுள்ள நிலையில் வவுனியா ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தில் காலை விசேட பூசை வழிபாட்டில் ஈடுபட்டார்.

இவ் வழிபாட்டு நிகழ்வில் அவரின் குடும்பத்தினர் மற்றும் வவுனியாவை சேர்ந்த சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பெண்களிற்கு கைத்துப்பாக்கியை நீட்டி வீரம் காட்டிய அர்ச்சுனா: நீதிமன்ற உத்தரவை மீறிய பெண்ணுக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம், பெரியவிளான் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பெண்களைத் துப்பாக்கி...

யாழில் கைக்குழந்தையை தவிக்க விட்டு இளம் தாய் மாயம்!

யாழ்ப்பாணத்தில் இளம் தாயொருவர் தனது கைக்குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு, மாயமாகியுள்ளார். இளவாலை பொலிஸ்...

முல்லைத்தீவில் என்.பி.பி பிரமுகரின் விடுதியில் 14 வயது சிறுமி துஷ்பிரயோகம்!

முல்லைத்தீவில் 14 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் 17 வயதான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்