முல்லைத்தீவு முகாம் மீதான புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட படையினருக்கு அஞ்சலி!

Date:

விடுதலைப் புலிகள் அமைப்பினரால் 1996 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒயாத அலைகள்1 தாக்குதலில் முல்லைத்தீவு இராணுவ முகாமில் கொல்லப்பட்ட 1169 படையினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு முல்லைத்தீவு பாதுகாப்பு படையினரால் முன்னெடுக்கபட்டுள்ளது.

நேற்று மாலை (18) 5.00 மணிக்கு இந்தநிகழ்வு இடம்பெற்றது.

1996 ஆம் ஆண்டு ஜூலை 18,19 ஆம் திகதிகளில் முல்லைத்தீவு இராணுவத் தளம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில்  உயிரிழந்த 1169 படையினர் நினைவாக முல்லைத்தீவு நகர்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள படையினரின் நினைவுத்தூபியில் 25 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இலங்கை இராணுவப்பிரிவின் சிங்கறெஜிமன்ட், விஜயபாகு றெஜிமென்ட் படைப்பிரிவினை சேர்ந்த படைவீரர்களே 1996 ஆம் ஆண்டு கொல்லப்பட்டார்கள்.

அவர்கள் நினைவாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் நினைவு தூபி அமைக்கப்பட்டு ஆண்டு தோறும் நினைவு நிகழ்வு நடைபெறுவது வழமை
2010 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் முல்லைத்தீவு மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சிசிர பிலப்பிட்டிய உள்ளிட்ட படைத்தபளபதிகள் அதிகாரிகள் கலந்து கொண்டு வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.

இதன்போது கொக்குளாய் விகாரையின் விகாராதிபதியினால் உயிரிழந்த படைவீரர்களுக்காக பிரித்ஓதி தானம் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு தாக்குதலில் உயிரிழந்த சிப்பாயொருவரின் மகன் தற்போது ஒரு இராணுவ அதிகாரியாக அந்த இடத்திற்கு வந்து வணக்கம் செலுத்தியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...

15 வயது சிறுமியை அடுத்த மனைவியாக்க நினைத்த 29 வயது குடும்பஸ்தர் கைது!

காதல் விவகாரம் என்ற போர்வையில் 15 வயது பாடசாலை மாணவியை தனது...

நேபாள சோகம்: உயிரிழப்பு 900-ஐ கடந்தது; 4,000+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. 4,000-க்கும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்