29.6 C
Jaffna
March 3, 2025
Pagetamil
குற்றம்

கடலில் சடுகுடு ஆடிய பருத்தித்துறை கஞ்சா கடத்தல்காரர்கள்: மடக்கிப் பிடித்த கடற்படை!

வட கடலில் 100 கிலோ கேரளா கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்களை கடற்படை கைது செய்துள்ளது.

காங்கேசந்ன்துறை கடற்பரப்பில் கடற்படையினர் நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது, ​​103.750 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் வந்த டிங்கி படகு கைப்பற்றப்பட்டதுடன், ஒரு டிங்கி படகும் பறிமுதல் செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

டிங்கி படகை கடற்படையினர் சோதனையிட தயாரான போது, ​​படகிலிருந்த கஞ்சா பொதிகளை கடலில் வீசிவிட்டு மூவரும் தப்பிச் செல்ல முயன்றனர். எனினும், அவர்களை மடக்கிப் பிடித்த கடற்படையினர், கடலில் வீசப்பட்ட 3 பொட்டங்களையும் மீட்டனர்.

பருத்தித்துறை, கிளிநொச்சியை சேர்ந்த சந்தேகநபர்கள்,  20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

சந்தேகநபர்களும், படகும், கேரள கஞ்சாவும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை போலீசில் ஒப்படைக்க உள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

பத்தேகம குழு மோதல் – இரு கோதரர்கள் கொலை

Pagetamil

மாணவியை துஷ்பிரயோகதிற்கு உட்படுத்தியோர் கைது

Pagetamil

திருடிய பெண்ணை காட்டிக்கொடுத்த கிளி

Pagetamil

சுடலையில் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்பு

Pagetamil

பேஸ்புக்கில் அறிமுகமாக அழகான யுவதியை சந்திக்க ஹோட்டலுக்கு சென்ற தொழிலதிபர்; அனைத்தையும் உருவிக் கொண்டு எஸ்கேப் ஆன யுவதி!

Pagetamil

Leave a Comment