பொது ஜன பெரமுனவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகவும் நிதி அமைச்சராக பசில் ராஜபக்ச பதவி யேற்றதையடுத்து மன்னார் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இன்று வியாழக்கிழமை (8) காலை சிலர் வெடி கொளுத்தினர்.
பொது ஜன பெரமுன கட்சியின் மன்னார் மாவட்ட ஆதரவாளர்கள் மற்றும் பொதுஜன பெரமுன கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் இணைந்து பசில் ராஜபக்ஸ மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பதாதைகளை காட்சிபடுத்தியதுடன் வெடி கொளுத்தியும் இனிப்புக்கள் பரிமாறியும் கொண்டாடியுள்ளனர்.
இதே வேளை நானாட்டான் மற்றும் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் பொது ஜன பெரமுன கட்சியினர் வெடி கொளுத்தினர்.




