கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் கொவிஷீல்ட் ஒக்ஸ்போர்ட் / அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் முதலாவது தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசியாக ஃபைஸர் தடுப்பூசியை ஏற்றும் வேலைத்திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு மேலும் 1.4 மில்லியன் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி கிடைக்கவுள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இம்மாதத்தின் மூன்றாம் வாரமளவில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி நாட்டை வந்தடைய உள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1