நேற்று 1,243 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 268,676 ஆக உயர்ந்துள்ளது.
நேற்றைய தொற்றாளர்களில் 1,229 பேர் புத்தாண்டு COVID-19 கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து சமீபத்தில் நாட்டிற்கு வந்த 14 நபர்களும் நேற்று COVID-19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
தற்போது நாடு முழுவதும் 27,194 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று, COVID-19 இலிருந்து குணமடைந்த 1,472 நபர்கள் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை 238,131 ஆக உயர்ந்தது. தொற்று சந்தேகத்தில் 902 பேர் மருத்துவ கவனிப்பில் உள்ளனர்.




