முன்னாள் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று இலங்கை பொதுஜன பெரமுன தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க உள்ளார்.
அவரது பெயர் நேற்று தேசிய தேர்தல் ஆணைக்குழுவால் வர்த்தமானியடப்பட்டது.
பசில் ராஜபக்ஷ இன்று காலை அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் நிதி மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சராக பதவியேற்க வாய்ப்புள்ளது.
அவர் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி பணிக்குழுவின் தலைவராகவும் உள்ளார்.
பசிலின் வருகை தொடர்பாக அவரது ஆதரவாளர்கள் மூலம் தினமும் அறிக்கை வெளியிடப்பட்டு, அவர் தொடர்பான பிம்பம் உருவாக்கப்பட முயற்சிக்கப்பட்டு வருவதும், தற்போதைய நெருக்கடிகளிலிருந்து மக்கள் கவனத்தை திருப்ப இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.




