29.8 C
Jaffna
March 29, 2024
இலங்கை கிழக்கு

15 துப்பாக்கி தோட்டாக்கள் அடங்கிய பொதி மீட்பு-மருதமுனையில் சம்பவம்!

வீடொன்றில் இருந்து 15 துப்பாக்கி தோட்டாக்கள் அடங்கிய பொதி ஒன்றினை கல்முனை பொலிஸார் மீட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை 5 ஆம் கிராமசேவகர் பிரிவு அல்-ஹம்றா வீதியில் உள்ள வீடொன்றின் கூரையில் எம்-16 துப்பாக்கிக்கு பயன்படுத்தும் தோட்டாக்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி தோட்டாக்கள் மீட்கப்பட்ட வீட்டு உரிமையாளர் தற்போது கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இன்று(7) மதியம் கல்முனை பொலிஸ் விசேட பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய இச்சுற்றிவளைப்பு இடம்பெற்றதுடன் அவ்வீட்டில் இருந்து 54 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரும் கைதாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை: கைதான ரௌடிகளின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பெற அனுமதி!

Pagetamil

யாழ் போதனா மருத்துவ கழிவு பிரச்சினைக்கு தீர்வு: கோம்பயன் மயானத்தில் எரியூட்டி திறப்பு!

Pagetamil

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

கல்முனை அநீதிக்கு எதிராக 5வது நாளாக போராட்டம்!

Pagetamil

Leave a Comment