டென்னிஸ் போட்டிகளில் மதிப்புமிக்க கிராண்ட்ஸ்லாம் தொடராக கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன்ஷிப், 2021 தற்போது இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இந்த தொடரின் இறுதிப் போட்டியின் நாணயச்சுழற்சியை மேற்கொள்ள இலங்கை பின்னணியை கொண்ட சிறுவன் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
விம்பிள்டன் அறக்கட்டளை, இந்த ஆண்டு தொடரின் ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டிக்கான நாணயச்சுழற்சியை மேற்கொள்ள Sean Seresinhe வை தெரிவு செய்துள்ளது.
இது சிறு குழந்தைகளில் மனநலப் பிரச்சினைகள் பற்றிப் பேசும், அவர்களை ஊக்கப்படுத்தும் ஒரு அடையாளமாகும்.
இறுதிப் போட்டியில் நாணயச்சுழற்சியில், நாணயத்தை சுண்டுவதற்கு Sean Seresinhe வின் பெயரை செய்ய விம்பிள்டன் அறக்கட்டளைக்கு லண்டனை தளமாகக் கொண்ட ‘ஒஃப் த ரெக்கோர்ட் யூத் கவுன்சிலிங்’ பரிந்துரைத்தது. இந்த அமைப்பு மனநல பிரச்சினைகள் உள்ள இளைஞர்களுக்கு ஆதரவு மற்றும் ஆலோசனையை வழங்கும் அமைப்பாகும்.