யாழில் கற்ற வித்தையையெல்லாம் மொத்தமாக இறக்கிய மணல் கடத்தல்காரர்கள்: 4 அதிரடிப்படையினர் காயம்!

Date:

யாழ்ப்பாணம் அரியாலையில் சட்டவிரோத மணல் கடத்தல்காரர்களை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்ட 4 அதிரடிப்படையினர் சிறு காயங்களிற்குள்ளாகினர். மணல் கடத்தல்காரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 3 மணியளவில் அரியாலை கிழக்கு பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

சட்டவிரோத மணல் ஏற்றிய உழவு இயந்திரம் ஒன்றை அதிரடிப்படையினர் சுற்றிவளைத்த போது, உழவு இயந்திரத்துடன் மணல் கடத்தல்காரர்கள் தப்பிச் செல்ல முயன்றனர்.

உழவு இயந்திரத்தை வெட்டி வெட்டி ஓடி தப்பிச் செல்ல முயன்றனர்.

உழவு இயந்திரத்தை மடக்கிப் பிடிக்க முயன்ற 4 அதிரடிப்படை பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிறு காயம் அடைந்து யாழ் வைத்திய சாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் உழவு இயந்திரமும், அதில் பயணித்த இரண்டு கடத்தல்காரர்களும் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வடக்கு கிழக்கில் தமிழ் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது என்றார் இந்திய துணை ஜனாதிபதி: சீ.வீ.கே தகவல்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையைக்...

இயந்திர கோளாறு காரணமாகவே தனியார் பேருந்தில் இருந்து பயணிகள் இறக்கப்பட்டார்களாம்!

பயணிகளை இடைநடுவில் தனியார் பேருந்து இறக்கியதாக சமூக வலைத்தளங்களில் எழுந்த குற்றச்சாட்டுத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்