யாழ்ப்பாணம் அரியாலையில் சட்டவிரோத மணல் கடத்தல்காரர்களை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்ட 4 அதிரடிப்படையினர் சிறு காயங்களிற்குள்ளாகினர். மணல் கடத்தல்காரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை 3 மணியளவில் அரியாலை கிழக்கு பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.
சட்டவிரோத மணல் ஏற்றிய உழவு இயந்திரம் ஒன்றை அதிரடிப்படையினர் சுற்றிவளைத்த போது, உழவு இயந்திரத்துடன் மணல் கடத்தல்காரர்கள் தப்பிச் செல்ல முயன்றனர்.
உழவு இயந்திரத்தை வெட்டி வெட்டி ஓடி தப்பிச் செல்ல முயன்றனர்.
உழவு இயந்திரத்தை மடக்கிப் பிடிக்க முயன்ற 4 அதிரடிப்படை பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிறு காயம் அடைந்து யாழ் வைத்திய சாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் உழவு இயந்திரமும், அதில் பயணித்த இரண்டு கடத்தல்காரர்களும் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.



