கடந்த 24 மணி நேர காலகட்டத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 417 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதாக 47,240 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
நேற்று கம்பளை பகுதியிலேயே அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டனர். அங்கு, 112 பேர் கைது செய்யப்பட்டனர். அ55 பேர் கண்டியில் கைது செய்யப்பட்டனர். 45 பேர் மாத்தளையில் கைது செய்யப்பட்டனர்.
மேற்கு மாகாணத்திற்குள் நுழையும், வெளியேறும் 14 வழிகளில் நேற்று 7,062 வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டன. மாகாணங்களிற்கிடையிலான பயணக்கட்டுப்பாடுகளை மீறிய 165 பேர் திருப்ப அனுப்பப்பட்டனர்.



