31.3 C
Jaffna
March 28, 2024
இந்தியா

இனி கர்ப்பிணி பெண்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் : மத்திய சுகாதாரத்துறை அனுமதி

கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு இதுவரை தடுப்பூசி செலுத்துவதற்கு அனுமதியளிக்கப்படாமல் இருந்து வந்தது.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் கர்ப்பிணி பெண்களுக்கு சோர்வு அல்லது பக்கவிளைவுகள் ஏற்படாது என்று எய்ம்ஸ் மருத்துவர்கள் ஆய்வு நடத்தி கூறியிருந்தனர்.

இந்த நிலையில், கொரோனா தொற்றுக்கு எதிராக கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய சுகாதாரத்துறை இன்று அனுமதியளித்துள்ளது. மேலும், தடுப்பூசி போடுவதற்கு கோவின் தளத்தில் முன்பதிவ செய்த பிறகு, அருகில் உள்ள தடுப்பூசி முகாம்களுக்கு நேரில் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான நெறிமுறைகளை மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“எம்பி சீட்டுக்காக கணேசமூர்த்தி தற்கொலை என்பதில் துளியும் உண்மையில்லை” – வைகோ

Pagetamil

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.1.5 கோடியை இழந்த கணவர்: கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியால் மனைவி தற்கொலை

Pagetamil

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு

Pagetamil

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஒரு வாரத்தில் இலங்கை அனுப்பப்படுவர்: தமிழக அரசு

Pagetamil

சிறையிலிருந்தபடி ஆட்சி புரியும் கேஜ்ரிவால்

Pagetamil

Leave a Comment