இலங்கை மத்திய வங்கி ஒதேநாளில் மிக அதிக பணத்தை அச்சிட்ட நாளாக நேற்றைய நாள் பதிவாகியுள்ளது.
நேற்று ஒரேநாளில் ரூ .208.45 பில்லியன் அச்சிடப்பட்டது,
கடந்த வாரம் ரூ .23 பில்லியன் அச்சிடப்பட்டிருந்தது.
வைரஸ் தடுப்பு முயற்சிகள் மற்றும் நிவாரணங்களிற்காக, கடந்த வாரம் அரசாங்கம் பணம் வழங்கிய பின்னர், ரூ .200 பில்லியன் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2 சதவிகிதம் செலவினங்களை அதிகரிக்க பாராளுமன்ற ஒப்புதல் கோரியதை அடுத்து மத்திய வங்கியின் பணப்புழக்கத்தின் விரைவான வேகம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.




