பௌத்த பிக்கு அடித்துக் கொலை!

Date:

பமுனுகம, உஸ்வெட்டகொய்யவா பகுதியில் உள்ள மாற்றுத் திறனாளிகளிற்கான முதியோர் இல்லம் ஒன்றில் தங்கியிருந்த பௌத்த பிக்கு ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த முதியோர் இல்லம் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஒன்று என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மனநலம் பாதிக்கப்பட்டு அங்கு தங்கிருந்த 73 வயதுடைய ஜாஎல பகுதியை சேர்ந்த ஒருவரே, பௌத்த பிக்குவின் தலையில் தாக்குதல் நடத்தியுள்ளார்.

நேற்று (19) காலை பிக்கு அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

அந்த தங்குமிடத்தில் 18 வயோதிபர்கள் உள்ளனர். முறையான அனுமதி பெற்று அந்த தங்குமிடம் இயங்குகிறதா என்பதையும் பொலிசார் ஆராய்கின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

ஈரானுடனான ஒப்பந்தம் நெருங்கி விட்டது!

அமெரிக்காவும் ஈரானும் இன்னும் இறுதிக் கட்டத்தை எட்டவில்லை, ஆனால் தங்கள் மோதலைத்...

டெங்கு உயர் ஆபத்து மாவட்டமாக கொழும்பு அறிவிப்பு; ஒரு வார விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கை

டெங்கு அபாயம் அதிகரிப்பு: கொழும்பில் ஒரு வார விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கை கொழும்பு...

அமெரிக்கா–ஈரான் அமைதி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகுமா? உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு

ஜெனீவாவில் முக்கிய சந்திப்பு; ஹோர்முஸ் நீரிணை திறப்பு, பொருளாதார தடைகள் நீக்கம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்