பௌத்த பிக்கு அடித்துக் கொலை!

Date:

பமுனுகம, உஸ்வெட்டகொய்யவா பகுதியில் உள்ள மாற்றுத் திறனாளிகளிற்கான முதியோர் இல்லம் ஒன்றில் தங்கியிருந்த பௌத்த பிக்கு ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த முதியோர் இல்லம் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஒன்று என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மனநலம் பாதிக்கப்பட்டு அங்கு தங்கிருந்த 73 வயதுடைய ஜாஎல பகுதியை சேர்ந்த ஒருவரே, பௌத்த பிக்குவின் தலையில் தாக்குதல் நடத்தியுள்ளார்.

நேற்று (19) காலை பிக்கு அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

அந்த தங்குமிடத்தில் 18 வயோதிபர்கள் உள்ளனர். முறையான அனுமதி பெற்று அந்த தங்குமிடம் இயங்குகிறதா என்பதையும் பொலிசார் ஆராய்கின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஈரான் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் படுகாயம்

அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களில் தெஹ்ரானில் உள்ள அவரது இல்லம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானின்...

நேட்டோவிலிருந்து விலகுவதை பரிசீலிக்கும் ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைக்கு நேட்டோ உறுப்பு நாடுகள் ஆதரவளிக்கத்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி இவர்தான்: தனி விசாரணை நடத்தி கண்டுபிடித்த கோட்டாவின் கூட்டாளி!

ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரி சஹாரன் ஹாஷிம் தான் என்று சட்டத்தரணி உதய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்