ப்ரியாமணிக்கு 300 ரூபாய் கொடுத்த ஷாருக் கான்… எதற்கு தெரியுமா!

Date:

நடிகை பிரியாமணி ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படப்பிடிப்பில் ஷாருக்கான் தனக்கு 300 ரூபாய் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார்

நடிகை பிரியாமணி கடைசியாக தி பேமிலி மேன் சீரிஸில் நடித்து இந்திய அளவில் பிரபலம் ஆகியுள்ளார். அதையடுத்து மீண்டும் அவரது மார்க்கெட் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட ப்ரியாமணி, சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாருக்கான் உடன் நடித்த அனுபவம் குறித்து மனம் திறந்துள்ளார்.

ஷாருக் கான் நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் பிரியாமணி ஒரு ஐட்டம் சாங் ஆடியிருந்தார். “நாங்கள் படப்பிடிப்பில் இருக்கும்போது ஷாருக்கானின் ஐபேடில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி விளையாட்டு விளையாடினோம். அப்போது ஷாருக் கான் எனக்கு 300 ரூபாய் அளித்தார். அவருடைய நியாபகமாக அதை இன்னும் என்னுடைய பர்சில் பத்திரமாக வைத்துள்ளேன்.

அந்தப் பாடலுக்காக ஐந்து இரவுகள் நாங்கள் படப்பிடிப்பு செய்தோம். அது மிகவும் அற்புதமான அனுபவமாக இருந்தது. இந்தியாவின் மிகப் பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் அவர் என்றும் அந்த வெற்றியை தனது தலையில் ஏற்றியதில்லை. அதனால்தான் அவர் பாலிவுட்டின் பாஷா என்று அழைக்கப்படுகிறார்.நான் ஷாருக்கானுடன் பணி செய்யும் போது மிகவும் சௌகரியமாக உணர்ந்தேன். ஏனென்றால் அவர் அனைவரையும் நன்றாக கவனித்துக் கொள்வார்.” என்றுதெரிவித்துள்ளார்.

ப்ரியாமணி தற்போது தெலுங்கில் ராணா டகுபதி உடன் ‘விரத பர்வம்’ படத்தில் நடித்து வருகிறார்.

spot_imgspot_img

More like this
Related

பேத்தியை சீரழித்த தாத்தாவுக்கு 15 வருட சிறை

12 வயதுடைய சொந்த பேத்தியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 81 வயதுடைய...

மட்டக்களப்பு மாமாங்கத்தில் மோட்டார் சைக்கிள் சீற்றை உடைத்து தங்க ஆபரணங்களை திருடிய திருடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய அன்னதான மடத்திற்கு  சென்ற பெண் ஒருவர் நிறுத்தி...

“குடிபுகு சான்றிதழ் விவகாரத்தில் ஆளுநர் என்னை தவறாக வழிநடத்துகிறார்” – கிஷோர்

குடிபுகு சான்றிதழ் முறைமையை நடைமுறைப்படுத்தினால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பாரிய வருமான இழப்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்