கறுப்பு, வெள்ளை, மஞ்சள் பூஞ்சைகளின் வரிசையில் பச்சை பூஞ்சை!

Date:

கறுப்பு, வெள்ளை, மஞ்சள் பூஞ்சைகளின் வரிசையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த இளைஞருக்கு நாட்டில் முதல்முறையாக பச்சை பூஞ்சை தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்றால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பின் குணமடைந்தவர்கள் ‘மியூகோர்மைகோசிஸ்’ எனப்படும் கறுப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்படுவது சமீபத்தில் கண்டறியப்பட்டது.

நாசி வழியாக மனித உடம்புக்குள் புகும் இந்த தொற்றுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் கண்கள் வரை பரவி பார்வையை பறிப்பதோடு உயிரிழப்பையும் ஏற்படுத்துகிறது. இதை போலவே, வெள்ளை மற்றும் மஞ்சள் நிற பூஞ்சை தொற்றுகளும் பரவி வருவது கண்டறியப்பட்டது. இந்நிலையில், மத்திய பிரதேசத்தை சேர்ந்த 34 வயது இளைஞர் ‘ஆஸ்பர்கில்லோசிஸ்’ எனப்படும், பச்சை நிற பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் இரண்டு மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்ற இவர், சமீபத்தில் வீடு திரும்பினார். சில தினங்களிலேயே மூக்கு வழியாக கடுமையான ரத்துக் கசிவு ஏற்பட்டது.

கடுமையான காய்ச்சலும் இருந்தது. இவர், கறுப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கருதிய டாக்டர்கள் பரிசோதனை மேற்கொண்டனர். அதில், இவருக்கு பச்சை நிற பூஞ்சை தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. நாட்டில் இந்த வகை பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபர் இவராக இருக்கக் கூடும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த தொற்று, இளைஞரின் நுரையீரல், சுவாசப் பாதை, ரத்தம் ஆகியவற்றில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

கிளிநொச்சியில் கிணற்றில் விழுந்து 2 வயது குழந்தை பலி

கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் இரண்டு வயது...

பதவியை துறக்கிறார் பிரிட்டன் பிரதமர்

பல மாத கால அழுத்தத்தைத் தொடர்ந்து, பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்...

சர்வதேச அணுசக்தி முகமையை நாட்டிற்குள் அனுமதிக்க ஈரான் இணக்கம்!

மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளின் முதல் சுற்றுக்குப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்