All India சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் உலக மக்களுக்கு கூட தெரியும். அவர் நடை, பேச்சு, ஸ்டைல் எல்லாமே சின்ன 6 வயது குழந்தை முதல் 60 வயது முதியவர் வரை கவர்ந்து இழுக்கக் கூடியது.
அதும்மட்டுமின்றி பணம் பேரு புகழ் வந்த அப்பறம் நல்லவனா வாழுறது கஷ்டம். ஆனா எல்லாமே தேவைக்கு அதிகமாக கிடைச்ச அப்பறமும் ஒரு மனுஷன் நல்லவரா எளிமையானவரா அன்பனவரா இருக்காருனா அது superstar ரஜினி மட்டுமே.தற்போது இவர் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துவிட்டார். படம் தீபாவளிக்கு ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்கள்.

இந்த நிலையில், எல்லோருக்கும் தெரியும், கடந்த 2002ஆம் ஆண்டு தமிழ் திரையுலகினர் கர்நாடக மாநிலம் காவிரி தண்ணி நமக்கு தர மறுத்ததற்கு இங்குள்ள அத்தனை நடிகர்களும் கர்நாடகத்திற்கு எதிராக குரல் எழுப்பி உண்ணாவிரதம் இருந்தனர். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அந்த உண்ணாவிரதத்தில் ஒரு சிறு குழந்தை ரஜினிக்கு பழச்சாறு கொடுத்து விரதத்தை முடித்து வைத்தது.
இது அந்தக் குழந்தை பழச்சாறு கொடுக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்த ரேகா, “இந்த புகைப்படம் தனக்கு மலரும் நினைவுகளை ஏற்படுத்திவிட்டது, தனது குழந்தை ரஜினியால் ஆசிர்வதிக்கப்பட்டார்” என கூறி ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளார். ஆம் அந்த குழந்தைதான் ரேகாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.




