எரிவாயு சிலிண்டருக்குள் மறைத்து வந்த ஹெரோயினின் பெறுமதி 1.758 பில்லியன் ரூபா!

Date:

வெலிகம, பொல்வதுமோதர கடலில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் மதிப்பு ரூ .1.758 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

219 கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கடல் வழியாக நாட்டிற்கு கடத்த முயன்ற 9 சந்தேக நபர்களை கடற்படை கைது செய்தது.

பல நாள் மீன்பிடி படகு வழியாக இலங்கை நீர்ப்பரப்பிற்குள் ஹெரோயின் கொண்டு வரப்பட்டது. பின்னர் அதை டிங்கிப் படகில் வெலிகம கடற்கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.

எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 219 கிலோ மற்றும் 800 கிராம் ஹெரோயின் பல நாள் மீன்பிடி இழுவைப்படகு மற்றும் ஒரு டிங்கிப் படகு ஆகியவற்றைக் கடற்படை கைப்பற்றியது.

இந்த இழுவை படகு மே 11 ஆம் திகதி மாத்தறை, கொட்டெகொட மீன்பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட்டு சர்வதேச கடலில் வெளிநாட்டு கடத்தல்காரர்கள் வழியாக ஹெரோயினை பெற்றது என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

சந்தேகநபர்கள், 26 முதல் 43 வயதுக்குட்பட்டவர்கள், வெலிகம, அஹங்கம, திக்வெல்ல, கொட்டெகொட, இஹலவத்தை, மிரிச, பொல்வதுமோதர மற்றும் பிலியந்தல வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.

கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

spot_imgspot_img

More like this
Related

பேத்தியை சீரழித்த தாத்தாவுக்கு 15 வருட சிறை

12 வயதுடைய சொந்த பேத்தியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 81 வயதுடைய...

மட்டக்களப்பு மாமாங்கத்தில் மோட்டார் சைக்கிள் சீற்றை உடைத்து தங்க ஆபரணங்களை திருடிய திருடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய அன்னதான மடத்திற்கு  சென்ற பெண் ஒருவர் நிறுத்தி...

“குடிபுகு சான்றிதழ் விவகாரத்தில் ஆளுநர் என்னை தவறாக வழிநடத்துகிறார்” – கிஷோர்

குடிபுகு சான்றிதழ் முறைமையை நடைமுறைப்படுத்தினால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பாரிய வருமான இழப்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்