மிருசுவில் பிள்ளையார் ஆலயத்தை இடித்து விட்டு தலைமறைவான டிப்பர் கைப்பற்றப்பட்டது (CCTV)

Date:

கொடிகாமத்திற்கும் மிருசுவிலுக்கும் இடையில், A 9 வீதியில் அமைந்திருந்த பிள்ளையார் ஆலயத்தை உடைத்த டிப்பர் வாகனம் இனம்காணப்பட்டு, பொலிசார் மீட்டனர்.

கடந்த 7ஆம் திகதி இரவு இனந்தெரியாதோரால் ஆலயம் இடிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, அங்கிருந்த சிசிரிவி கமராவை பொலிசார் ஆய்வு செய்த போது, டிப்பர் வாகனமொன்றினால் ஆலயம் இடிக்கப்படும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

ஆலயத்திற்கு அருகில் டிப்பர் வாகனத்தை நிறுத்திய சாரதி, வாகன நடமாட்டமில்லாத சமயத்தில், டிப்பரை பின்னால் செலுத்திஈ ஆலயத்தை உடைத்து விட்டு அங்கிருந்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

இந்த காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை நடத்திய பொலிஸ், இராணுவ புலனாய்வாளர்கள் டிப்பரை அடையாளம் கண்டுள்ளனர்.

இன்று டிப்பர் மீட்கப்பட்டது. சாரதியை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவுக்கு பிடியாணை

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனைக் கைது செய்வதற்கான பிடியாணை...

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது 2026 ஆம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்