இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல்முறையாக சி.ஐ.டிக்கு பிரதிப் பணிப்பாளராக பெண் அதிகாரி நியமனம்!

Date:

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக குற்றவியல் புலனாய்வுத் துறையின் (சிஐடி) பிரதி பணிப்பாளராக ஒரு பெண் பொலிஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (எஸ்எஸ்பி) இமேஷா முத்துமால சிஐடியின் பிரதி பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் ஒப்புதலின் பேரில் இந்த நியமனம் செய்யப்பட்டது.

எஸ்எஸ்பி இமேஷா முத்துமால 2007 நவம்பர் 03 ஆம் திகதி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக (ஏஎஸ்பி) நியமிக்கப்பட்டு, பொலிஸ் சேவையில் 14 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார்.

ருஹுணு பல்கலைக்கழகத்தின் இளங்கலை பட்டதாரியான இவர், நுகேகொட காவல் பிரிவு, குற்ற புலனாய்வுத் துறை மற்றும் பொலிஸ் அனுமதிப் பிரிவில் பணியாற்றியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

மலேசியாவில் கட்டாய தொழிலாளியாக வைக்கப்பட்டிருந்த பெண் மீட்பு: 7 இலங்கையர்கள் கைது!

சக இலங்கையர் ஒருவரைக் கட்டாயத் தொழிலாளியாகச் சுரண்டியதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவரை...

கபில சந்திரசேன மரண விசாரணையில் நீதிபதி அதிருப்தி

மர்மமான முறையில் மரணமடைந்தவரும், ஏர்பஸ் ஒப்பந்தத்தில் பிரதான சந்தேக நபருமான ஸ்ரீலங்கன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்