நடிகை இலியானா தமிழில் படங்கள் நடிக்காமல் இருப்பதற்கு இதுதான் காரணமாம்!

Date:

நடிகை இலியானா தமிழ் சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந்த ‘கேடி’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதையடுத்து விஜய் நடிப்பில் ‌ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘நண்பன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். அது தான் இலியானா நடித்த கடைசி தமிழ் படம். அதன் பிறகு எந்தத் தமிழ் படத்திலும் இலியானா நடிக்கவில்லை. தெலுங்கிலும் பெரிதாக படங்கள் நடிக்கவில்லை.

இலியானா தமிழில் நடிக்கத் தடை விதித்தப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலியானா ஒரு தமிழ் படத்தில் நடிக்கத் தயாரிப்பாளரிடமிருந்து பெரிய தொகையை அட்வான்ஸாக வாங்கிக் கொண்டு பின்னர் படத்திலும் நடிக்க வில்லையாம், அட்வான்ஸ் பணத்தையும் திருப்பித் தரவில்லையாம்.

அதனால் ஆத்திரமடைந்த அந்தத் தயாரிப்பாளர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்து அவரைத் தமிழ் படங்களில் நடிக்க தடை விதிக்கக் கேட்டுக் கொண்டாராம். மேலும் தெலுங்கு திரைப்பட சங்கத்திற்கும் இலியானா நடிக்கத் தடை விதிக்கக் கோரி கடிதம் அனுப்பிவிட்டாராம். இதனால் தான் இலியானா தமிழ் மற்றும் தெலுங்கில் படங்கள் நடிக்கவில்லையாம்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தில்ஷான் மதுஷங்கவை ஒப்பந்தம் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

காயம் காரணமாக விலகிய பிரைடன் கார்ஸுக்குப் பதிலாக தில்ஷான் மதுஷங்கவை சன்ரைசர்ஸ்...

அமெரிக்க முற்றுகையை கடந்து சென்ற ஈரானிய கப்பல்கள்

அமெரிக்க இராணுவத் தடையையும் மீறி, ஈரானியத் துறைமுகங்களிலிருந்து பயணித்த குறைந்தது இரண்டு...

மறுவாழ்வு மையத்தில் சேர்ந்தார் பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ்

மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கைது செய்யப்பட்ட பாப் பாடகியும் நடிகையுமான பிரிட்னி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்