17 பேர் உயிரிழப்பு… 2 பேர் மாயம்!

Date:

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் 17 பேர் உயிரிழந்ததாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், 5 பேர் காயமடைந்துள்ளனர். 2 பேர் காணாமல் போயுள்ளனர்.

10 மாவட்டங்களில் 67,613 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 271,110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டது. அங்கு 161,383 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

26,806 நபர்கள் 106 தற்காலிக தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கன மழை, வெள்ளம், மண் சரிவு காரணமாக 17 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன, மேலும் 978 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இதற்கிடையில், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் ஒன்பது மாவட்டங்களுக்கு வழங்கிய நிலச்சரிவு எச்சரிக்கைகள் மாலை 4.30 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, காலி, கேகாலை மற்றும் இரத்னபுரி மாவட்டங்களில் நிலச்சரிவு எச்சரிக்கைகள் நடைமுறையில் உள்ளன.

spot_imgspot_img

More like this
Related

செம்மணிக்கு வருகை தந்த ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளும் நீதிக்கோரிய போராட்டம்

ஜரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்  குழுவினர் செம்மணி மனித புதைகுழியை நாளையதினம் பார்வையிடவுள்ள...

கன்னியா பகுதியில் விகாரை அமைக்க திட்டம்; தமிழ் மக்களின் உணர்வுகளை அரசாங்கம் மதிக்க வேண்டு

திருகோணமலை மாவட்டத்தில் வரலாற்று, மத மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த கன்னியா...

நாடாளுமன்றத்தில் எனது இறுதிநாட்கள் இவை: ஊசி அர்ச்சுனா!

தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய யாழ் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்